சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புவரை மன்னர்களின் அரண்மனையில் சாலியர்கள் முக்கியப்பொறுப்புக்களில் இருந்தனர்.அரபுநாட்டிலிருந்து வாங்கப்படும் புதிய குதிரைகளை போருக்கும்,அணிவகுப்பிற்கும் தயார்படுத்தும் பணியில் இருந்தனர்.அந்த ஜீன் இன்னும் சாலிய ரத்தங்களில் ஓடுவதால்தான், சாலியர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களாகவும்,பிரபலமான ஜோதிடர்களாகவும் இருக்கின்றனர்.
சாலியர்களின் குணங்கள் எல்லோருக்கும் உதவுதல்,எல்லோரிடமும் உண்மையை மட்டுமே பேசுதல்,தமது குடியிருப்புக்களில் அடைக்கலம் தேடி வருபவர்களின் குடும்பத்தாரை தமது சொந்த மகன் மகள் போல பாவித்தல்,எங்கும் எப்போதும் நேர்மையாக இருத்தல்,ஊர் நிர்வாகத்தில் தனது சொந்தங்கள் பிரச்னையைக் கொண்டு வந்தாலும் நியாயமாக தீர்ப்பு வழங்குதல்,பசியென்று வந்தவர்களுக்கு உணவும்,இருப்பிடமும் அளித்தல் .
தனது ஜாதி மீது மட்டும் பாசம் இல்லாத சில ஜாதிகளில் சாலியர் ஜாதியும் ஒன்று என்பது நிர்வாணமான உண்மை.
பிழைப்புக்கு வந்த ஜாதிகளை தாங்கிப்பிடித்து,அவர்களை கோடீஸ்வர ஜாதியாக்கிய சாலிய ஜாதியானது இன்று தனித்தனி மரங்களாகத்தான்(தனிமரம் போல் தனி மனித சாதனையாக மட்டும்) வளருகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,எஸ்.இராமச்சந்திராபுரம்,சுந்தரபாண்டியம்,டபிள்யூ.புதுப்பட்டி,முகவூர்,புனல்வேலி, ஆண்டிபட்டி,சக்கம்பட்டி,சுப்புலாபுரம்,இராஜபாளையம் இவைதான் சாலியர்கள் அதிகம் வாழுமிடங்கள்.
எல்லா ஊர்களிலும் சுமார் 15 முதல் 20 வருடங்கள் வரையிலும் கஷ்டப்பட்டு சம்பாதித்து,சேமித்து சேர்க்கும் பணத்தை சாலிய அப்பாக்கள்,தாத்தாக்கள் வட்டிக்கு விட்டு பிழைக்கின்றனர்.யாருக்கு?
சாலியரைத் தவிர பிற ஜாதிக்காரர்களுக்கு.
இது வட்டிக்குவிடுபவர்களுக்கு நல்லதுதானே என்கிறீர்களா? இல்லை.வட்டிக்கு வாங்குபவர்களுக்குத்தான் நல்லது.எப்படி?
கூழைக் கும்பிடு யார் போட்டாலும்,அவர்களுக்கு ஒரு வட்டிக்கு கடன் தருகின்றனர் நமது சாலிய அப்பாக்களும்,தாத்தாக்களும்.(எல்லா ஜாதியிலும் 4 வட்டிக்குக் குறைந்த கடன் தருவதில்லை)
எதுக்கெடுத்தாலும் தற்பெருமையடிக்கும் நமது குணமே அந்த கடனை வரவிடாமல் தடுத்துவிடுகிறது.
எனக்குத் தெரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர் ஒருவர், வேறு ஜாதியைச் சேர்ந்தவருக்கு வெறும் ரூ.15,000/- கடன் கொடுத்தார்.இரண்டு வருடம் வரை ஒழுங்காக வட்டி வந்தது.வட்டிக்கு வாங்கியவரின் வீட்டின் மதிப்பு ரூ.1,00,000 பெறும்.
நமது சாலியச்சிங்கம்,அவன் வீடு எனக்குத்தான் என பெருமையடித்துக்கொண்டே இருக்க,நமது சாலிய நரிகள் சும்மா இருப்பார்களா?
எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு,நேராக அந்த வேறு ஜாதியைச் சேர்ந்தவரிடம் போய் ,
'ஏம்பா தம்பி,நீ எப்படி ஒழுங்கா வட்டி கட்டுறே! உனக்குக் கடன் கொடுத்தவரோ,உன் வீடு அவருக்குனு சொல்லிகிட்டுத்திரியாரப்பா' என உண்மையை உரைத்து உரத்துக்கூறிவிட்டு வந்துவிட்டனர்.
பிறகென்ன வட்டியும் போச்சு,அசலும் போச்சு.இது ஒரு உதாரணம்.
இதன் மூலம் உணரும் மனோதத்துவ உண்மை என்ன?
யாரது மனது பலவீனமானதோ,அவரது மனத்தில் பொறாமை வளரும்.அந்தப் பொறாமையால் இன்று சாலியஜாதி நாசமாகிக் கொண்டிருக்கிறது.
2:39 AM
Labels: saliya maharishi, saliya matrimonial, saliyar, saliyas
Subscribe to:
Posts (Atom)