சால் என்றால் துணி என்று தூய தமிழில் அர்த்தம்.இயர் என்றால் துணியை இயற்றுபவர்கள்(உருவாக்குபவர்கள்) என்று அர்த்தம்.இப்படித்தான் நமக்கு சாலியர் என்று ஜாதிப்பெயர் வந்தது.
நான் கேள்விப்பட்டவரையிலும்,பஞ்சாப்பில் இருக்கும் ஜாலியன்வாலாபாக் என்ற இடம்தான் நமது பூர்வீகமாக இருந்தது கிபி 1000 வரையிலும்!
அப்போது முஸ்லீம்கள் இந்தியாவின் செல்வச்செழிப்பை அறிந்து கொள்ளையடிக்க இங்கே வந்தனர்.அவர்கள் அப்போது இந்தியாவில் இருந்த எல்லா ஜாதியிலும் பெண்ணை திருமணம் செய்தனர்.வலுக்கட்டாயமாகத்தான்.
அதே போல, நம்மையும் மிரட்டினர்.நாம்தான் கில்லாடியாச்சே!
இத்தனாம் தேதியன்று இந்த இடத்துக்கு வரவும்.பெண்ணோடு எங்கள் குல வழக்கப்படி திருமணமே செய்துவைக்கிறோம் என கூறிவிட்டனர்.
திருமணம் முடிந்தால்,முடிந்தகையோடு,நீங்கள்தான் எங்கள் சம்பந்தி ஆகிட்டீங்களே! இஸ்லாத்துக்கு மதம் மாறுங்கன்னு மிரட்டியே லெப்பை,சாயபு,மரைக்காயர் போன்ற இந்து ஜாதிகளை மதம் மாற்றினர்.இந்த சூட்சுமத்தை உணர்ந்த நம் சாலிய முப்முப்முப்முப்பாட்டன்கள் ஒரு பக்கா திட்டம் போட்டனர்.
திருமணநாளன்று,ஒரு நாயை மணப்பெண் போல அலங்கரித்து,கயிற்றால் கட்டிவைத்து மணமேடையில் ஏற்றி வைத்துவிட்டு,இரு நாட்களுக்கு முன்பே பஞ்சாப்பிலிருந்து தென் திசைநோக்கி ஓடி வந்துவிட்டனர்.நமது ஜாதிப்பெயரால் இப்போது அங்கே ஒரு பெரிய மைதானம் மட்டும் இன்னும் இருக்கிறது.
கூகுளில் சாலியர் என்று தேடினால்,பஞ்சாப்பில் ஆரம்பித்து,தமிழ்நாடு,இலங்கை வரையிலும் சாலியர்கள் சிதறிக்கிடக்கின்றனர்.
கேரளாவில் பத்மசாலியர்கள் ஒருங்கிணைந்து அரசியலில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கின்றனர்.தென் தமிழ்நாட்டில், வள்ளியூர்,நாகர்கோவிலில் பத்மசாலியர்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர்.தவிர,சாலியர்கள்,பட்டாரியர்கள்,பட்டு சாலியர்கள்,அடவியர்கள்,சவுராஷ்டிரா சாலியர்கள் என பல்வேறு பெயர்களில் வாழ்ந்துவருகின்றனர்.
இதில் பட்டுசாலியர்கள்,பத்ம சாலியர்கள்,சவுராஷ்டிரா சாலியர்கள் தம்மை பிராமணர்களுக்குச் சமமாக நினைத்து உயர்வாக வாழ்ந்துவருகின்றனர்.
பத்மசாலியர்களுக்கும் சாலியர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமண உறவு துவங்கியுள்ளது.
ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா,கலசலிங்கம் பல்கலைக்கழகம் நிறுவனர் தி.கலசலிங்கம்,போத்தீஸ் நிறுவனர் போத்தி மூப்பனார் என சாலிய நட்சத்திரங்களால் சாலிய இனம் இருப்பது அரசியல் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.
8:47 AM
8:42 AM
சாலியர் இன சகோதரர்கள்,மச்சான்கள்,பெரியப்பாக்கள்,மாமாக்கள்,யாருன்னே தெரியாத சாலிய சொந்தங்களுக்கு
நான் இன்னிக்குத்தான் இந்த வலைப்பூவுக்கு பொறுப்பேற்றிருக்கிறேன்.இனி.இந்த சாலியாஸ் வலைப்பூ உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் சாலியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்கும்;சாலியர்களிடையே சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கும்; மணப்பெண் அல்லது மணமகன் கிடைக்காத சாலியர்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும்.
ஆமாம் இது ஒரு சர்வதேச சாலியாஸ் ஸ்டால்!!!
Subscribe to:
Posts (Atom)