if, you may contact this blogspot writer or owner.....please go to www.aanmigakkadal.blogspot.com and mail this blogspot.http://www.aanmigakkadal.blogspot.com
சாலிய நட்சத்திரம்:போத்தீஸ் துணிக்கடையின் வெற்றி வரலாறு
ஸ்ரீவில்லிபுத்தூர்:கோதை பிறந்த ஊர்;கோவிந்தன்(மகாவிஷ்ணு)வாழும் ஊர்;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான். கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றுஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.தென் தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தோன்றியதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள்.அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.திருப்பாவை என்னும் வைஷ்ணவப்பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு.இந்தபுதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும்.சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்ட்த்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்!!!
33 வார்டுகளுடன்,இரண்டு பழமையான கோவில்களுடன் சிவ மற்றும் வைணவ திருத்தலங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்று கல்விநகரமாகவேத் திகழ்கிறது.இந்த ஊரின் அமைதிக்கு இங்கிருக்கும் இறைசக்திகளும்,அமைதியை விரும்பும் சாலிய இனமும் காரணம் என நிரூபிக்கமுடியும்.அப்படிப்பட்ட சாலியர் இனத்தில் பிறந்தவர்தான் சடையாண்டி மூப்பனார் அவர்கள்.
அவர்கள் தனது மகனாகிய போத்தி மூப்பனாரின் பெயரால் கி.பி.1920களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு துணிக்கடையைத் துவக்கினார்.அதுவே,இன்று சென்னையில் போத்தீஸ் என்றே ஆலமரமாக விழுதுடன் விளங்குகிறது
கி.பி.1920 முதல் கி.பி.1940கள் வரையிலும் ரொக்கத்துக்கு மட்டுமே துணிமணி(ஜவுளி என்பது ஆங்கில வார்த்தை என்று அறிக) விற்பனை செய்துவந்தார்.அது வரையிலும் தனது குடும்பத்துக்கும் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்திவந்தார்.கி.பி.1940களின் இறுதியில் ஆண்டாள் கோவில் அருகில் ஒரு இடத்தை வாங்கினார்.அந்த இடத்தில் புதிய போத்தீஸ் என்ற பெயரில் துணிக்கடையைத் துவக்கினார்.1980களின் இறுதியில் அந்தக்கடை விரிவடைந்தது.1990களில் திருநெல்வேலியில் போத்தீஸ் துணிக்கடை ஐந்துமாடிகளுடன் துவக்கப்பட்டது.அதன் வியாபார வீச்சு தூத்துக்குடி,திருச்செந்தூர்,நாகர்கோவில்,மார்த்தாண்டம்,கேரளாவின் எல்லைநகரங்கள் வரையிலும் வியாபித்தது.
1990களின் இறுதியில் சென்னையில் போத்தீஸ் கால் பதித்தது.இன்று சென்னை வாழ்நடுத்தர மக்களின் ஆடைகளுக்கான லட்சியக்கடையாக சென்னை போத்தீஸ் உயர்ந்து நிற்கிறது.விரைவில் கோவையிலும் போத்தீஸ் கிளைதிறக்கவுள்ளனர்.சென்னையிலிருந்து ஓட்டோ(otto)என்ற ஆயத்த ஆடை அதாங்க ரெடிமேட் ஆடைகளையும் போத்தீஸ் சந்தைப்படுத்திவருகின்றனர்.
சாலியர்களின் நட்சத்திரங்களில் ஒன்றாக போத்தீஸை சாலியாஸ் வலைப்பூ போற்றுகிறது.
சாலியர் இனத்தில் இராஜபாளையம் நகரில் சிவகாமிபுரம் தெருவில் 1950களில் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர் காளிமுத்து என்பவர்.இவர் தனது இளம் வயதிலிருந்தே வத்திறாயிருப்பு அருகிலிருக்கும் சதுரகிரிக்கு அடிக்கடி சென்றுவந்தார்.அதன் விளைவாக,சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலின் அருகிலேயே தினசரி அன்னதானம் செய்யத்துவங்கினார்.
அதற்காக அன்னதான மடம் ஒன்றைத் துவங்கினார்.
இந்த மடம் சுமார் 1980களின் ஆரம்பத்திலிருந்து சதுரகிரி மலைமேல் செயல்பட்டுவருகிறது.இவரது இந்த சேவையால் இவருக்கு பெரும்புகழ் ஏற்பட்டது.இந்தப்புகழை ஜீரணிக்க இயலாமல்,சேடப்பட்டியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் இவருக்கு ஏராளமான தொல்லைகள் கொடுத்துவந்தார்.அவர் வேறு யாருமில்லை;அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது,நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்குச்சீட்டை தனது சட்டைப்பையில் வைத்திருந்தவர்.
தனது அரசியல் செல்வாக்கை வைத்து,அறநிலையத்துறை,வனத்துறை,காவல்துறையை காளிமுத்துசுவாமிகளின் ஆசிரமத்தினை நடத்திட விடாமல் செய்ய முழு மூச்சாக முயன்றார்.காளிமுத்துசுவாமிகளின் தாயாரின் ஆனந்த வல்லியின் சமாதியை இடித்து தரைமட்டமாக்கிட காவல்துறை முயன்றது.அப்படி இடிக்க முயன்றபோது,இடிக்க வந்தவர்கள் அப்படியே சில விநாடிகள் அசையாமல் நின்றுவிட்டார்கள்.இதனால்,அவர்கள் பயந்துபோய் சதுரகிரி மலையை விட்டுஇறங்கிவிட்டனர்.இவர்கள் இடிப்பதற்கு முன் உணவு உண்ட இடம் காளிமுத்துசுவாமிகளின் ஆசிரமம்தான்.என்ன ஒரு விந்தை!!!
சுமார் 25 ஆண்டுகளாக காளிமுத்துசுவாமிகளின் அன்னதான மடம் சதுரகிரியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இதற்குத் தேவையான பொருட்களை ஏழுர் சாலியர்கள் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,சத்திரப்பட்டி,புனல்வேலி,
முகவூர்,சுந்தரபாண்டியம்,ஆண்டிபட்டி,சக்கம்பட்டி பகுதியிலிருந்து அரிசி மற்றும் உணவுப்பொருட்களை வீடு தோறும் பெற்று அவற்றை சேகரித்து,சதுரகிரிக்குக் கொண்டு செல்லுகிறார்கள்.சதுரகிரியில் அன்னதானம் செய்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் சாலியர்கள் வாழும் தெருக்கள் மொத்தம் 13 இருக்கின்றன.இந்த 13 தெருக்களிலும் வாழும் சாலியர்களின் வீடுகள் அனைத்திற்கும் சென்று, ‘சுந்தரமகாலிங்கத்துக்கு அரோகரா’ என்று காளிமுத்து சுவாமிகளும் அவருடன் வரும் ஓரிருவரும் கூறுவர்.சாலியர்கள் அனைவரும் அவரவரது சக்திக்கேற்ப தன்னிடமிருக்கும் உணவுப்பொருட்களை தானமாகத் தருவர்.பணமாகவும் தருவதுண்டு.இந்த 13 தெருக்களையும் சுற்றிமுடிக்க 10 நாட்களாவது ஆகும்.
Labels: அன்னதானமடம், காளிமுத்துசுவாமிகள், சதுரகிரி